திருப்பூர் மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், உரிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால் மட்டுமே அதற்கான வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்த முடியும். இதை மனைதில் கொண்டு செயல்படும் சட்டமன்ற உறுப்பினர் - நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நிர்வாக வசதிகளை ஏற்படுத்தவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார்.
மாவட்ட ஆட்சியரகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துறை சார்ந்த அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல் அலுவலகங்கள் அமைக்க மாண்புமிகு தமிழக முதலைச்சர் அறிவிப்புச் செய்தார். தற்போது புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் இதர துறைகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்துவருகின்றன.
இ.எஸ்.ஐ மருத்துவமனை
மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிக்கும் திருப்பூரில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுவது, சுமார் 10 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. இது தொடர்பாக தொடர் கவனம் செலுத்தி, ஒவ்வொருமுறையும் சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்பப்பட்டது. தொழிற்சங்கங்களோடு இணைந்து குரல்கொடுத்த நிலையில், தற்போது பணிகள் தொடங்கியுள்ளன.
உள் விளையாட்டரங்கம்
திருப்பூரில் உள் விளையாட்டரங்கம் ஏற்படுத்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தும், தேவையான ஒப்பந்தம் கையெழுத்தாகாததால் பணிகள் தொடங்கப்படவில்லை. விளையாட்டு அமைப்புகளின் இக்கோரிக்கையில் தொடர்ந்து கவனம் செலுத்தியதன் மூலம், சிக்கண்ணா கல்லூரி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியதால், உள் விளையாட்டரங்க திட்டத்துக்கான தடை நீங்கியது. அரசின் பங்கு நிதியோடு, கூடுதலாக தேவைப்படும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள்
இடம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களின் நிலையை கணக்கில் கொண்டு, அவர்களுக்கான தங்கும் விடுதியை அரசு அறிவித்துள்ளது. இதே முறையில் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில், வீட்டு வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சாலைகள், பாலங்கள்
திருப்பூரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சாலை வசதியை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகும். சென்ற ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட 5 ரயில்வே மேம்பாலங்களின் பணிகள் பல்வேறு காரணங்களால் தடைபட்டிருந்தன. இப்பிரச்சனையில் செய்த தொடர் தலையீட்டின் காரணமாக கூலிபாளையம் ரயில்வே மேம்பால பணிகள் தற்போது முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையம் முன் சுரங்கப்பாதைக்கு நில எடுப்பில் பிரச்சனை இருந்தது. கால்நடை மருத்துவத் துறையிடம் அனுமதிபெற்று தற்போது விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மற்ற பாலங்களின் பணிகளும் விரைவுபடுத்த தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
உதயமாகிறது திருப்பூர் (தெற்கு) வட்டம்
திருப்பூரின் மக்கள் தொகைப் பெருக்கத்தை கணக்கில் கொண்டு வருவாய் நிர்வாக வசதிக்காக திருப்பூர் தாலூகாவை பிரிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழக அரசு திருப்பூர் (வடக்கு), (தெற்கு) வட்டம் என பிரித்து புதிதாக அறிவித்துள்ளது. இரண்டு வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும்போது, மக்களுக்கான திட்டங்கள் அமலாவதில் தற்போதுள்ள சிரமங்கள் குறையும்.(எம்.எல்.ஏ பணிகள் - பிரசுரம்)
சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய முடியும்?
கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களால் மட்டும் எப்படி ஊழலின்றி செயல்பட முடியும்?
மக்கள் சந்திப்பு பயணங்கள் ... (இரண்டாண்டு பணிகள் பிரசுரம்)
திருப்பூருக்காக வாதாடிய எம்.எல்.ஏக்கள் ...
பட்டா மற்றும் குடியிருப்பு பிரச்சனைகள்...
திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 1
திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 2
அவசர பிரச்சனைகளில் நேரடித் தலையீடு ...
மறக்க முடியுமா? ... திருப்பூர் வெள்ளம் 2011...
தொகுதி நிதி ஒதுக்கீடு ...
0 கருத்துகள்:
Post a Comment