Wednesday 11 December 2013

திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 2

விரைவில் 4 வது குடிநீர் திட்டம்

திருப்பூரின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண  2011 ஜூன் 30 -ல் தற்போதைய அமைச்சர் மாண்புமிகு எம்.எஸ்.எம். ஆனந்தன் (திருப்பூர் வடக்குத் தொகுதி எம்எல்ஏ), பல்லடம் எம்எல்ஏ, கே.பி.பரமசிவம் ஆகியோருடன் சென்று இது தொடர்பான அமைச்சர்களை நேரில் சந்தித்தார். ஆக.11 ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது. இதன் அடிப்படையில், 3 வது குடிநீர் திட்டத்தின் மூலம் கூடுதலாக ஒரு கோடி லிட்டர் குடிநீர் வாங்க அரசு முடிவு செய்தது.

தாமதமான குடிநீர் விநியோகம் தொடர்பாக புகார்கள் வந்தன, இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து, வாய்ப்புள்ள இடங்களில் 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் ஏற்படுத்தப்பட்டது. இந்தநிலையில், கூடுதலான நீர்த்தேக்க கட்டமைப்பு வசதிகளோடு 4 வது குடிநீர் திட்டம் விரைவில் வருமென அரசு உத்தரவாதப்படுத்தியுள்ளது.

ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டம்

திருப்பூர் மாநகராட்சியின் உட்கட்டமைப்பை, வரி வருவாயை மட்டும் வைத்துக்கொண்டு மேம்படுத்துவது சாத்தியமில்லை. எனவே, சிறப்பு நிதி ஒதுக்கீடு வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், ‘ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சியை சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவில், சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டு திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் ரூ.3 ஆயிரத்து 272 கோடி மதிப்பில் திட்ட கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனை
தினமும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் வந்துசெல்லும் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டிய தேவை உள்ளது. இருப்பினும், தற்போதுள்ள நிலையில் அவ்வப்போது எழும் பிரச்சனைகளில் தலையிட்டு சீர்செய்யப்படுகிறது. குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் வலிப்பு மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டபோது சட்டமன்ற உறுப்பினர் செய்த தலையீடு, நோயாளிகள் பாராட்டும் வகையில் அமைந்தது.

(எம்.எல்.ஏ பணிகள் - பிரசுரம்)
  1. சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய முடியும்?

  2. கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களால் மட்டும் எப்படி ஊழலின்றி செயல்பட முடியும்?

  3. மக்கள் சந்திப்பு பயணங்கள் ... (இரண்டாண்டு பணிகள் பிரசுரம்)

  4. திருப்பூருக்காக வாதாடிய எம்.எல்.ஏக்கள் ...

  5. பட்டா மற்றும் குடியிருப்பு பிரச்சனைகள்...

  6. திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 1

  7. திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 2

  8. அவசர பிரச்சனைகளில் நேரடித் தலையீடு ...

  9. மறக்க முடியுமா? ... திருப்பூர் வெள்ளம் 2011...

  10. தொகுதி நிதி ஒதுக்கீடு ...

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)