Sunday 8 December 2013

அவசர பிரச்சனைகளில் நேரடித் தலையீடு ...


புகார்களின் தீவிரத்தன்மையை பொறுத்து, நேரடியாக தலையிட்டு தீர்க்கப்பட்ட பிரச்சனைகளில் சில ...

  • கருவம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திற்கு மாற்று இடம் கோரி மக்கள் மறியலில் ஈடுபட்டபோது, சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்றதன் மூலம் தீர்வு எட்டப்பட்டது.
  • பொறியியல் கல்விக்கான கலந்தாய்வு சமயத்தில் சான்றிதழ்கள் வழங்குவதை விரைவுபடுத்திட முன்கூட்டியே தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். இருப்பினும், ஜூன் 4 அன்று, கடைசி நேரத்தில் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ நேரில் சென்று, பணிகளை முறைப்படுத்தினார்.
  • அரசு மருத்துவமனையில், சிகிச்சை தாமதமாவதாக புகார் எழுந்தபோது நேரில், பிரச்சனைகளை ஆய்வு செய்து  தீர்வுகாணப்பட்டது.
  • நொய்யலாற்றில் ஆகாயத் தாமரை படர்ந்ததால், ஆற்றங்கரையில் கொசுக்கள் பெருகி, மக்கள் பாதிக்கப்பட்டனர். இதன் அடிப்படையில் கோம்பைத்தோட்டம், ஜம்ஜம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். உரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி பிரச்சனை தீர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், ஓடைகள் மாநகராட்சியின் வசம் ஒப்படைக்க பொதுப்பணித்துறை உத்தரவு பெறப்பட்டதால், உடனுக்குடன் கவனம் செலுத்த முடிகிறது.
  • சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு கேட்டு போராடினர். இதனை அடுத்து விடுதிக்கு அங்கு நேரில் சென்ற எம்.எல்.ஏ, உரிய அதிகாரிகளிடம் பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.
  • எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில், 12 வது வார்டு பகுதியில் கட்டப்பட்டு வந்த குடிநீர் தொட்டியின் கட்டுமானம் குறித்து புகார்கள் எழுந்தன. உடனடியாக, அப்பகுதிக்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டதில், பிரச்சனை சரிசெய்யப்பட்டது.
  • முதியோர் உதவித்தொகை வழகிட வறுமைக்கோட்டு எண் கேட்கக் கூடாது என மாண்புமிகு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். எனினும், தாசில்தார் அலுவலகத்தில் அறிவிப்பு அமலாகவில்லை. எம்.எல்.ஏ தலையிட்டதன் மூலம் 1000க்கும் அதிகமான தகுதியுள்ள மனுக்களுக்கு, தாசில்தார் அலுவலகம் மூலம் வறுமைக்கோட்டு எண் பெறப்பட்டது.
  • வாய்பேச முடியாதோர், காதுகேளாதோருக்கு உதவித்தொகை வழங்கச் செய்ய முடிந்துள்ளது. 
  • எம்.எல்.ஏ மேற்கொண்ட நேரடி தலையீடுகளில் மிக முக்கியமானது, 2011 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகளாகும்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)