அரசு விழாக்களிலும், சாதனைக் கொண்டாட்டங்களிலும் மக்களைச் சந்திப்பது ஒரு வாய்ப்பு. ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மக்களின் குறைகளை அறிய முடிவதில்லை. எனவே, மக்களின் குறைகளை அறிய, சிறப்பான முகாம்களை ஏற்படுத்தி மக்களைச் சந்திக்கிறோம்.
மக்கள் குறையோடு அலைபேசியில் தொடர்புகொண்டால், அப்பகுதிக்கு நேரில் செல்வதுடன், உரிய துறை அதிகாரிகளை அழைத்து குறைகள் எடுத்துக்கூறப்படுகின்றன. தபால் மூலமும், இணையம் மூலமும் பெறப்படும் புகார்கள், உரிய முறையில் மதிப்பளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. எந்த நாளிலும் மக்கள் சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க வாய்ப்பளிக்கும் விதத்தில், சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல், தான் தொகுதியில் உள்ள நாட்களில் எல்லாம் காலை நேரத்தில் அலுவலகத்தில் இருந்து, நேரில் சந்திப்பதுடன், கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
தொழில் - தொழிலாளர் வாழ்வுரிமை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூரில் 2012ம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு சிறப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை கட்சிக் குழுத் தலைவருமான சீத்தாராம் யெச்சூரி எம்.பி., பங்கேற்றார். ஏ.சக்திவேல், ஏ.சி.ஈஸ்வரன், பி.கே.எஸ்.செந்தில்குமார், எம்.பி.முத்துரத்தினம் உள்ளிட்ட முன்னணி உற்பத்தியாளர் அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் பங்கெடுத்து திருப்பூரின் தொழிலைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேசுவதால் மட்டும் அரசு உதவி செய்யாது, இங்குள்ள தொழிலாளர்களுடன், தொழில் அமைப்புகளும் சேர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒன்றுபட்டு போராடுவதன் மூலம் தான் தொழிலைப் பாதுகாக்க முடியும் என்று உரையாற்றினார்.
(எம்.எல்.ஏ பணிகள் - பிரசுரம்)
தொகுதியின் அனைத்து பகுதி மக்களையும் சந்திக்கும் வகையில், நடந்துள்ள குறைகேட்புக் கூட்டங்களில், மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, அவை உரிய துறை அதிகாரிகளுக்கு அனுப்பபடுகிறது. இதன் மூலம், மக்கள் குறைகள் அரசு நிர்வாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் உரிய தீர்வுகளும் காணப்பட்டன. அவசியமான பகுதிகளைக் கண்டறிந்து, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் சாத்தியமுள்ள பணிகள் உடனடியாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
மக்கள் குறையோடு அலைபேசியில் தொடர்புகொண்டால், அப்பகுதிக்கு நேரில் செல்வதுடன், உரிய துறை அதிகாரிகளை அழைத்து குறைகள் எடுத்துக்கூறப்படுகின்றன. தபால் மூலமும், இணையம் மூலமும் பெறப்படும் புகார்கள், உரிய முறையில் மதிப்பளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. எந்த நாளிலும் மக்கள் சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க வாய்ப்பளிக்கும் விதத்தில், சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல், தான் தொகுதியில் உள்ள நாட்களில் எல்லாம் காலை நேரத்தில் அலுவலகத்தில் இருந்து, நேரில் சந்திப்பதுடன், கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
தொழில் - தொழிலாளர் வாழ்வுரிமை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூரில் 2012ம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு சிறப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை கட்சிக் குழுத் தலைவருமான சீத்தாராம் யெச்சூரி எம்.பி., பங்கேற்றார். ஏ.சக்திவேல், ஏ.சி.ஈஸ்வரன், பி.கே.எஸ்.செந்தில்குமார், எம்.பி.முத்துரத்தினம் உள்ளிட்ட முன்னணி உற்பத்தியாளர் அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் பங்கெடுத்து திருப்பூரின் தொழிலைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேசுவதால் மட்டும் அரசு உதவி செய்யாது, இங்குள்ள தொழிலாளர்களுடன், தொழில் அமைப்புகளும் சேர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒன்றுபட்டு போராடுவதன் மூலம் தான் தொழிலைப் பாதுகாக்க முடியும் என்று உரையாற்றினார்.
(எம்.எல்.ஏ பணிகள் - பிரசுரம்)
சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய முடியும்?
கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களால் மட்டும் எப்படி ஊழலின்றி செயல்பட முடியும்?
மக்கள் சந்திப்பு பயணங்கள் ... (இரண்டாண்டு பணிகள் பிரசுரம்)
திருப்பூருக்காக வாதாடிய எம்.எல்.ஏக்கள் ...
பட்டா மற்றும் குடியிருப்பு பிரச்சனைகள்...
திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 1
திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 2
அவசர பிரச்சனைகளில் நேரடித் தலையீடு ...
மறக்க முடியுமா? ... திருப்பூர் வெள்ளம் 2011...
தொகுதி நிதி ஒதுக்கீடு ...
0 கருத்துகள்:
Post a Comment